சனி, 15 ஆகஸ்ட், 2015

யாரும் அடிமையில்லை..

யாருக்கும் யாரும் அடிமையில்லை..
சுதந்திரத்தின் காற்றை
இந்த உலகமே சுவாசிக்கட்டும்..
இனிய வாழ்த்துக்கள்..

விழித்தெழுந்தோம்....
கொதித்தெழுந்தோம்...
அடிமைத்தளை அறுதெழுந்தோம்..
ரத்தம் சிந்தி- ஒரு
யுத்தமின்றி
நம் முன்னோர்
பெற்றுத் தந்த
சுதந்திரமிது....

அடிமை வாழ்வு
களைந்தது - அமைதி
வழி கொண்டு
சாதனைகள்
பற்பல கண்டு
ஏற்றங்கள் நாம்
கொண்டோம்..

வாருங்கள் தோழரே..
பயணதூரம் இன்னும்
உண்டு..

அடிமைத்தாளை அறுத்தாலும்
அடிமை வாழ்வை அறுக்கவில்லை..
அந்நியரை அண்டி வாழும்
வாழ்க்கை இன்னும் முடியவில்லை..

நம்மால் முடியும்
நம்மாலும் முடியும்
நாம்மை விட்டால்
யாரால் முடியும்?

வாருங்கள்...
சுதந்திரத்தில் சூளுரைப்போம்
யாரையும் அடிமை
கொள்ளாமால் இந்த
உலகம்
நம்மை அண்டிவாழும்
வழிவகுப்போம்....

யாருக்கும் யாரும் அடிமையில்லை..
சுதந்திரத்தின் காற்றை
இந்த உலகமே சுவாசிக்கட்டும்..

இனிய வாழ்த்துக்கள்..

கருத்துகள் இல்லை: