ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

பயணம்

காலமும் கரைந்து போனது
வயதும் கரைந்து போனது
கனவுகளோ
இன்னும் நீர்த்து போகவில்லை...

காலமாற்றத்தில்
பருவமாற்றத்தில்
இலையுதிர்த்த மரங்கள்
தன்னை புதுப்பித்து
கர்வத்துடன்
வேரூன்றி வளர்வது போல்
என் மாற்றங்களை
அனுபவ உரமாக
என்னில் கொட்டி
எந்தன் பயணத்தை
தொடர்ந்துகொண்டே இருப்பேன்......

அழுக்குகளை சேர்க்கும்
சிறு குட்டையாக அல்ல..
எல்லாவற்றையும் சுருட்டி எடுத்து
கடலில் அலசும் ஆறாகவே
என் பயணம் இருக்கும்...

கருத்துகள் இல்லை: