வியாழன், 6 ஆகஸ்ட், 2015

படித்ததில் பிடித்தது

ஈடு கொடுக்க முடியாத சொந்தம் ------- தாய்
`
முன்னேற்றத்தின் வழிக்காட்டி -------- தந்தை
`
மீள முடியாத பந்தம் -------- பாசம்
`
என்றும் நிலைக்காதது ------- கற்பனை
`
விடிந்தால் முடிந்து போகக் கூடிய வாழ்க்கை -------- கனவு
`
வெற்றி பெற முதல் வைப்பது ------------- நம்பிக்கை
`
வாழ்க்கையில் இருக்கக் கூடாதது --------------- எதிபார்ப்பு
`
புரிந்து கொண்டவர்களுக்கே -------------- வாழ்க்கை
`
கண்ணீருடன் முடிவடைவது --------------------- கஷ்டங்கள்
`
அழியாத சொந்தம் ---------------------------நட்பு
`
உலகத்தில் அனைவருக்கும் கிடைக்காதது ---------நிம்மதி
`
ஆசைப்படுதலின் முடிவு --------------------- அறிவு
`
வறுமையை விட கொடிய நோய் ---------------பிரிவு

சிந்தனை....
தெரியும் தெரியும் என அலட்டிக்கொள்ளாதே
பின் எதையும் தெரியாமல் போய்விடுவாய்.
`
தினம் இல்லை என்று கூறினால்
எதுவும் இல்லாமல் போய்விடும்.
`
மனதில் கஷ்டம் வந்தால் உன் நண்பரிடம்
கூறிவிடு மனது லேசாகிவிடும்.
`
உள்ளத்துக்கு ஆசை கொள்
உடலுக்கு ஆசை கொள்ளாதே.
`
உன்னை ஒருவன் ஏமாற்றினால்
நீ இன்னொருவரை ஏமாற்றிவிடாதே.
`
எதையும் எதிர்பார்த்து ஏமாறுவதை விட.
எதிர்பார்க்காமல் வாழ்ந்துவிடு.
`
கிடைக்கும் என்றால் ஆசைகொள்
கிடைக்காதென்றால் விட்டுவிடு.
`
முகத்தை அழகு படுத்தாதே
உள்ளத்தை அழகு படுத்திக்கொள்.
`
உண்மையுள்ள அன்பை நீ காட்டு
இறைவனின் அன்பு உனக்கு கிடைக்கும்.

வெற்றியை நோக்கிப் பற!
பறக்க முடியாவிட்டால் ஓடு!
ஓட முடியாவிட்டால் நட!
நடக்கவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல்.

ஆனால், எப்படியாவது நகர்ந்துகொண்டே இரு.

கருத்துகள் இல்லை: