வியாழன், 6 ஆகஸ்ட், 2015

யானையை போல் வாழாதே


ஒருவர் யானையை கட்டி போட்டிருந்த வழியாய் சென்று கொண்டிருந்தார். வேடிக்கை பார்த்தவருக்கு ஒன்று தோன்றியது. இவ்வளவு பெரிய யானையை இப்படி சின்ன கயிறால் முன் காலை மட்டும் கட்டி போட்டிருக்காங்களே என்று.செயின் கூட போடலையே என்று. கயிற்றை அறுத்துவிட்டு ஓட இந்த யனைக்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று அந்த நண்பர் யோசித்தார். யானைப்பாகனிடம் இது எப்படி சாத்தியம் என்று நண்பர் கேட்டார்.அதற்கு யானைப்பாகன் யானை மிகச்சிறியதாக இருக்கும் போது இந்த சின்ன கயிற்றால் கட்டி போட்டு பழகியது, அதுக்கு அப்பொழுது அதனை அற்றுவிட்டு போக முடியாது. யானை பாவம் அதனையே நினைத்து நம்மால் கயிற்றை அறுக்க முடியாது என்று இன்றும் அப்படியே இருந்து வருகிறது என்றார். இதே மாதிரி நம்மில் எத்தனை பேர் நம்மால் முடியாது,முன்பு முயற்சி செய்தோமே என்று பின்பு முயற்சிக்காமல் இருந்து வருகிறோம். ஏன் ?நாமும் நம்மால் முன்னால் முடியாதை இப்ப முயற்சி செய்து பார்க்கக்கூடாது.


Lesson from elephant : 

“YOUR ATTEMPT MAY FAIL,  BUT NEVER FAIL TO MAKE AN ATTEMPT “

கருத்துகள் இல்லை: