வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

ஏழைக்கு பிறந்ததா?

இதோ.. சோர்ந்து கிடக்கும்
ஒரு தாயின் வறண்டு கிடக்கும்
மார்பை கவ்வி அங்கே
அமுதம் கிடைக்காதா என
தேடும குழந்தை செய்த
தவறென்ன?

ஏழைக்கு பிறந்ததா?

யார் தந்தது இந்த வறுமை
உழைக்கும் வர்க்கத்தை
அட்டையாய் உறிஞ்சும்
அதிகார வர்க்கமா?

இயலாமையில் துடிக்கும்
இந்த மக்களை
எதற்கும் மதிக்காத
அரசாங்கமா?

ஒருவேளை உணவிற்குக்கூட
உத்திரவாதம் தரமுடியாத
முதுகெலும்பற்ற
தலைமை எதற்கு ...?


Embedded image permalink

கருத்துகள் இல்லை: