வியாழன், 6 ஆகஸ்ட், 2015

அப்பா - படித்ததில் ரசித்தது


வயதில்--"எங்கப்பா போல ஒரு ஆளைப் பார்க்கவே முடியாது."

6---"அவருக்கு எல்லா விஷயமும் அத்துபடி"

10---"தங்கமானவர்.ஆனால் பொசுக் பொசுக்கு கோபம் வந்திடும். மிட்டாய் தின்னதுக்காக என்னை அடிச்சிட்டாரு."

12---"நான் சின்னப்பிள்ளையா இருந்தபோதுஎன்னை நல்லா கவனிச்சிக்கிட்டாரு

14--"அவருக்கு சீக்கிரம் திருப்தியே வராது,நாப்பது மார்க் எடுத்தால் அய்ம்பது எடுக்கணும்பாரு.99மார்க் எடுத்தாகூட--ஒரு மார்க்கை ஏன் கோட்டை விட்டே'ம்பாரு'

16---என்னைச் சுத்தி என்ன நடக்கிதுங்கிரதை புரிஞ்சிக்கவே மாட்டேன் என்கிறாரு. பழங்காலத்து மனுஷனாவே இருக்காரு."

18---"எடுத்தேன் கவிழ்த்தேன்னுதான் எல்லா நடவடிக்கையும்."

20---"அப்பப்பா,அந்த மனுஷனை புரிஞ்சுக்கவே முடியல. அம்மா எப்படிதான் காலம் தள்ளறாங்களோ?"

25---"எது கேட்டாலிம் 'கிடையாது','இல்லை','கூடாது'ங்கிற பேச்சுதான். இவரெல்லாம் ஒரு மனுஷனா?"

30--என் பையனை சமாளிக்கிறது கஷ்டமா இருக்கு. என்னை எங்கப்பா எப்படித்தான் சமாளிச்சாரோ?"

40--"என்னை எங்கப்பா எவ்வளவு ஒழுக்கத்தோடகட்டுப்பாட்டோட வளர்த்தார் தெரியுமா? அதனால்தான்,இந்தளவு நல்லா இருக்கேன்."

45--"எங்கப்பாவை நினைக்கும்போது ரெம்ப பெருமையா இருக்கு."

50--"ஒருத்தனை மேய்க்கிறதுக்கு எவ்வளவு சிரமப்படறேன்?நாங்க மூன்று பேரு. ஒரு அண்ணன் மற்ற தம்பி அத்தனை பேரையும் கட்டுக்கோப்பா வளர்த்தார் எங்கப்பா. அவர் கிரேட்."

55--"ஒவ்வொரு விஷயத்தையும் திட்டம் போட்டு முடிக்கிறதுல அவரை மிஞ்ச ஆளே இல்லை."

60---"எங்கப்பா போல ஒரு ஆளை பார்க்கவே முடியாது."

(நான்கு வயதில் நாம் சொன்னது சரிதான் என்பதை உணர்வதற்குள்

56ஆண்டுகள் ஓடி விடுகின்றன).

கருத்துகள் இல்லை: