வியாழன், 6 ஆகஸ்ட், 2015

என் பயணம்

இருளடர்ந்த பாதையில்
என் பயணம் நீள்கிறது...
வெளிச்ச கீற்றுக்கள்
வற்றாத வெள்ளமாய் 
என் மனதில்.....
நம்பிக்கை தீராது
கடல் தேடும் நதியாய்
நீண்டு பயணிக்கிறேன்..
என் மேல் பிறர் கொண்ட
நம்பிக்கை நீர்த்து போனாலும்
என் மேல் நான் கொண்ட 
நம்பிக்கை திடமாயிருக்கிறது..
விடியலை அடையும் 
என் பயணம் நீண்டாலும்
வெற்றியடையாமல் 
நிற்காது..

‪#‎சங்கர்_நீதிமாணிக்கம்‬

கருத்துகள் இல்லை: