வியாழன், 5 ஜனவரி, 2017

மனதை மயக்கும் மந்திர சாவி


எல்லோரும் தொலைத்துவிட்டு
தேடிக்கொண்டு இருக்கிறோம் இந்த
மந்திர சாவியை..

இந்த சாவி
சிலருக்கு
அன்பாய் இருக்கலாம்..
சிலருக்கு
நம்பிக்கையாய் இருக்கலாம்..
சிலருக்கு
ஆறுதலாய் இருக்கலாம்.

ஒரு பொம்மையாய் நானிருக்க
என்னை இயங்க வைக்கும்
மந்திர சாவி....!!!

என் அப்பாவின்
அன்பு வார்த்தைகளும்..
கொடுத்த தன்னம்பிக்கையும்
என்மேல் கொண்ட நம்பிக்கையுமே..!

உலகறியா சிறுவனாய் இருக்கையிலே
“நீ இருக்க என்னகென்ன கவலை”
என்ற நம்பிக்கை சாவி என்னில் தந்து
நீங்கி சென்றவரை..
மறக்கவியலுமா?

உலகை அறிந்துகொள்
உலகை படித்துக்கொள்..
உலகை புரிந்துகொள்..
உலகை பற்றிக்கொள்ளதே..’
சொன்னவர்தான் மாண்டுபோனார்..
சொல்லொண்ணா துயரம்தந்தே..

பெற்றுக்கொண்டேன் மந்திர சாவிகளை..
பற்றில்லா பற்றுகொண்டு
பகையில்லா வாழ்வு கொண்டு..

துன்பமுள்ள வாழ்வினிலும்
துக்கம் சுழன்றடிக்கும் வேளையிலும்
தூக்கம் தொலைக்காமல் வாழுகிறேன்..

தூக்கம் தொலைக்காமல் இருப்பதே
பெருவரமல்லவா?


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: