திங்கள், 30 ஜனவரி, 2017

விந்தையா நீ

நயனங்களில் நஞ்சை விதைத்த
நீயே மருந்துடன் வந்தாயே
கண்மயக்கும் வெண்மதியாகி சிந்தை நின்றாய்
பொன்சிலையா பெண்சிலையா மதிமயங்கி நின்றேன்
கண்மலரே கவிமலரே இதயம் பறித்த இன்னுயிரே
நரகத்தின் சொர்க்கம் நீ
பசிநேர அமிர்தம் நீ
விழிமலரின் வெள்ளியருவி நீ
கார்மேக கொடைமழை நீ
சொல்லாத வார்த்தையின் மௌனம் நீ
சுவையான வாழ்க்கையிலே சொல்லாத விளக்கம் நீ
நாடகங்களை அரங்கேற்றும் மேடைவாழ்வில்
நரகத்தை நகர்த்தும் விந்தையா நீ..!"


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: