ஆங்காரக் குரல் எதற்கு
அடங்குவாயா அக்கிரமக்காரனே...
வீராப்பு என்னிடம் எதற்கு
உரியவனிடம் போய் காட்டு..
ஏய்த்து பிழைப்பதும்
ஏமாற்றி பிழைப்பதும்
பதுங்கி பாய்வதுமே உன்னிலையடா..
நான் உயர உயர பறப்பவன்..
உன்னில் தாழ்ந்தவனில்லை...
உரக்கக் கூவினால்
அடங்கிவிடுவதில்லை உண்மைகள்..
அடங்குவது பயமுமல்ல..
அடக்குவது வீரமுமல்ல..
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக