வியாழன், 26 ஜனவரி, 2017

" நான் பெற்ற சுதந்திரம் "



சுதந்திரம் என்பது சொல்லில் வருவதல்ல
அது செயலில் பெறுவது..
வட்டத்துக்குள் பொருந்தும் சதுரமாய்
சட்டத்துக்குள் நிற்பது சுதந்திரம்..
எடுக்கப்படுவதும் அல்ல
பறிக்கப்படுவதும் அல்ல
கொடுக்கப்படுவதும் அல்ல..
கொடுத்து பெறுவதும்
எடுத்துக்கொடுப்பதும்
இயல்பாய் இருத்தலே சுதந்திரம்..
நான் பெற்ற சுதந்திரம்
நம்பிக்கையில் கோர்த்த பட்டம்..
என் சுதந்திரத்தின் எல்லை
மற்றவர் மூக்கு நுனி தொடுவதல்ல..
மற்றவர் எல்லை மிதிக்காமல் இருப்பதே..
கட்டற்றதல்ல சுதந்திரம்..
எங்கும்
காட்டாற்றுக்கும் கரைகள் உண்டு..


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: