புதன், 4 ஜனவரி, 2017

நீந்தி வரலாம்...



தங்கம் தகித்திடுமே
நெருப்பாற்றில் நீந்திடுமே..
அங்கத்தின் அழுக்கெல்லாம் கழுவி
தூயதாகி கண்ணில் பளபளக்க....!

துயர்மிகுந்த சோதனையா?
தாங்கிடுவேன் தங்கமாக..
ஆழிப்பேரலையின் அடங்காப்பசி வாயிலில்....
நீந்திடுவேன்
சூழ்ந்துவரும் சோதனைகள் மீண்டிடுவேன்..

கொட்டிடுமே தேள்தானே கொடுக்காளே வெடுக்கென்று..
சுட்டிடுமே வார்த்தைகளும் சுருண்டிடுமே
மென்மனதும்..
தட்டிடுவேன் தூசியென..
வெட்டிடுவேன் துயரவலை..
நீந்திடுவேன் மகிழ்ச்சியலை..

வா.. தோழமையே...
கட்டிடுவோம் துன்பமெல்லாம்..
மிதித்திடுவோம் காலின்கீழாய்..
நீந்திடுவோம் வாழ்கடலை..

அட..
துணிந்தபின்னே..
அந்த வாழ்கடலும் நம் கணுக்காலே..
இவ்வார்த்தை கானலல்ல..
நீந்திக்கடந்திடுவோம்
இது கனவுமல்ல..


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: