இறக்கை விரிக்கும்
இமைகளின் கதவுகளால்
கண் சிறையிலென்னை
அடைத்துவிடு
உன்னை விட்டு விலகமுடியவில்லை
தூசிகளை துடைத்தெரிய
சாமரம் வீசும் அந்த இமைகள்
மெல்ல என்னையும் அணைத்துக்கொள்ளட்டும்..
விழிகளில் வழியும் ஆனந்த அருவியாய்
இருக்கவே விரும்புகிறேன்
உள்ளிருந்து உறுத்தும் துரும்பாயல்ல
மூடும் இமைக்குள்ளும் நானே
பார்க்கும் விழியிலும் நானே
பரவசம் தருமா...!
அந்த
இமைச்சிறை கதவுகள்...?
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக