ஏனென்று கேட்ட கேள்வியிலே
பிறந்த பதிலில் வாழ்கிறோம்..
கேள்விகள் பிறக்கவும்
சிந்தனை தெளியவும்
வழிகள் காணவும்
என
எல்லாம் சிந்தனையின் குழந்தைகள்...
நம் மேல் கொண்ட
நம்பிக்கை
வாழ்க்கையை
எதிர்கொண்டு வாழ்கிறது..
பிறன்மேல் கொள்ளும் நம்பிக்கை
யோசிப்பை சமயங்களில் முடக்கிப்போட
மனதையும் முடமாக்கியதோ...?
மனிதனாய் வாழ நம்பிக்கை கொண்டோம்..
தரணியில் பூத்திட வேர்கொண்டோம்..
பண்பாட்டின் பெருமை நம்மை
தூங்கி நிறுத்த..
இன்று
பண்பாட்டின் அழிவை
நாமும் நடத்துகிறோம்..
பிறராலும் நடத்தப்படுகிறது..
சுரணை கெட்டோம்..
பெருமை என்று நினைத்தோம்..
பெயரும் மறந்தோம்.
ஊரும் மறந்தோம்..
பெயரின் இருக்கிறது
இனத்தின் அடையாளம்..
பண்பாட்டில் இருக்கிறது
இனத்தின் வாழ்க்கை..
அடையாளம் தொலைத்துக்கொண்டு
வாழ்க்கைக்கு போராடுகிறோம்..
அகமிழந்தும்..
சுயமிழந்தும்..
யாரென்று வாழ்வது இந்த பூமியில்...?
அடிமையாய் வாழ்ந்து தான்
அகமிழந்தோமா.!
சுயமிழந்தோமா.!
மீட்டெடுப்போம்..
மீண்டெழுவோம்..
மீட்சிபெறுவோம்..
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக