திங்கள், 24 அக்டோபர், 2016

பூமகள் கரங்கள்..

நேசத்தில் சுட்டுகிறது பூமகள் கரங்கள்..
வானதேவனே என்னை வஞ்சித்து விடாதே..
உன் உன்னத அன்பின் அணைப்பிலே நான்..

உன் அழகின் சிரிப்பில்
என் குழந்தைகள் பசியாருகிறது..
உன் பாசமழையில் களைப்பு நீக்கி
தலையாட்டி புதியாய் கிளைக்கிறது..

வா.. என் கரம் பிடித்து
மெல்ல மெல்ல மண்ணுக்கு இறங்கி வா..
வேட்கை கொண்டு வெட்கம் இல்லாமல் வேண்டுகிறேன்.
நம் தாபம் தீரும் நேரத்திலே தான்
இங்கே இன்பம் சிரிக்கும்..

நீ என்னை வெறுத்து நின்றுபோவதால்
பின்னாளில்
உன்னை ரசித்து கவிதை எழுத
ஒருவரும் இல்லாமல் போவர்கள்..

வா..
மேகத்தை துணையாக்கி வந்து விடு..
உன் மழைக்கரங்களால்
வெட்கம் தீர அணைத்துவிடு..


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: