வியாழன், 6 அக்டோபர், 2016

"நின்னைச் சரணடைந்தேன்"



யாருமறியா ஒரு நொடியில்
என் இதயம் தொட்ட உன் விழி பார்வையில்
சரணடைந்தேன்...
காவிய காதலும் அல்ல...
காமத்தின் வேடமும் அல்ல..
அன்பின் வேர்கள் தான்
இதயம் தொட்டது..

சாத்திரங்கள் பொய்யாயின..
சாதி மத பேதங்கள் பொய்யாயின..
மெய்யென்றே காதல் சொல்லியது
என்றைக்கும் மாறாது என்று..

சரணடைந்த நேரத்தில் எல்லாம் போனது..
துக்கமும் துயரமும்
வேதனையும் சோதனையும்
வேடிக்கை மட்டுமே காட்டியது..

கடந்து செல்லும் பாதைகள் கொஞ்சம் கடினமே..
வாழ்க்கையும் போராட்டமே..
நின்னை சரணடைந்த நேரத்தில்
எல்லாம் இனிதானது..


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: