புதன், 5 அக்டோபர், 2016

திருமண வாழ்த்துகள்

திருமண வாழ்த்துகள்

அன்பென்னும் கூட்டுக்குள்ளே
அழகாக வாழும் இருமனது..
அந்த இருமனதும் ஒருமனதாய் வாழுதே
இன்ப கூட்டுக்குள்ளே..
கோபங்கள் நிலையில்லை – அங்கு
கோபங்கள் நிலையில்லை
அன்பு பேசுகின்ற மனதிற்கும்
காதல் சொல்லுகின்ற மனதிற்கும்
இன்பம் தானே இவ்வுலகின் எல்லை..
ஊடலில்லா உறவில்லை – அதை
உடைத்திடும் அன்புதானே வாழ்க்கையின் முழு எல்லை..
கண்கள் பேசிடட்டும் மௌனத்தின் மொழியிலே..
கரங்கள் கோர்த்துக்கொண்டு காதல் சொல்லும்
இதழ்கள் பயின்ற மொழியினிலே.....
துன்பத்தை வென்று வாழும்
இன்பம் தானே வாழ்க்கை என்றும்
வாழ்ந்துவிட வேண்டுகிறேன்..
வாழ்த்துகளும் அன்புகளும்..
என்னருமை தங்கைக்கும் மாமனுக்கும்..


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: