ஞாயிறு, 23 அக்டோபர், 2016

*காணாமல் போன காதல் கவிதை வரிகள்*




கண்களுக்குள் நின்று
நெஞ்சிலாடும் ஊஞ்சலாய்
நீங்காத நினைவுகளாய்...
என்னில் நிழலாடுகிறது உந்தன் உருவம்..

காலம் கல்லையும் கரைந்து செல்கையில்
உன் மனதின் கருமேகங்கள்
விலகாமல் என்னை இருளில் வைப்பது ஏனோ..

காதலின் தூரத்து நினைவுகள் எல்லாம்
என் கண்களில் குளிரினிமை தருகிறது..
மனமோ அனலில் சுருளும் சருகாக..

தெளிந்த நீராய் இருந்த மனதில்
கல்லெறிந்து கலக்கிவிட்டு
கண்ணாம்பூச்சி காட்டுகிறாய்..

வெள்ளை தாளில் கிறுக்கி சென்றதுபோல
உன் நினைவுகளை என்னில் சிதறவிட்டு
எங்கு மறைந்துகொண்டாய்..

கூர்தீட்டிய கத்தி கொண்ட உன் கையில்
கண்ணுக்கு தெரியாத இழையில்
தொங்கிக்கொண்டு இருக்கிறது நமது உறவு..

ஆனாலும்..
எனக்குள் எப்போதும்
இருந்து விடுகிறது
உனக்கான நேசம்....


சங்கர் நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: