மனதிருக்கு..
மனதில் உறுதியிருக்கு.
உயிரிருக்கு..
உயிரில் உணர்விருக்கு
காலென்ன போனாலென்ன..
காலனே வந்தாலென்ன
“கை”யிருக்கு
தன்னம்பிக்”கை”
இருக்கு..
உதட்டில் புன்ன”கை”
இருக்கு..
உள்ளத்தில் நம்பிக்”கை”
இருக்கு..
அறிவியலின் துணையிருக்க
அறிந்தவரின் துணையிருக்க
உள்ளத்திலே துணிவிருக்க
காலென்ன போனாலென்ன..
காலனே வந்தாலென்ன....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக