செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

காற்றோடு சுவாசமாய்

காற்றோடு சுவாசமாய்
மனதோடு நேசமாய்
எங்கும் கரைந்திருக்கும் உணர்வுகள்..
கனவுகளோடு பூத்து மணந்திடும்
நம் நேசத்தின் காதல் பூக்களையும்..
காதோடு இசைக்கும் உன் வளைக்கர ஓசையும்..
இன்பபோதையின் வெட்கத்திலுன் சிணுங்கலும்
உறக்கமில்லா இரவுகளாய் நம் காதலை
இம்மண்ணில் வார்த்தெடுக்க - நானும்

கணங்கள் தோறும் காத்திருக்கிறேன்
யுகம்யுகமாய் உன் விரல் தீண்டலுக்காய்

கருத்துகள் இல்லை: