ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

ஒரு புரிதலின் காதல்...

பூக்கள் மலர்ந்திருக்கும்
இன்பத்தின் தோட்டம்..

சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சிகள்
வடிக்கும் இன்பத்தின் பாக்கள்..

அவர்கள் தனிமைக்கு அரங்கம்
அங்கே காத்திருக்க..

சுற்றித்திரியும் மின்மினிகளின்
கண்ணொளியில் உள்ளங்கள் மயங்க..

ஆற்றுபடுத்த முடியா அன்பில்
எழுந்த இன்பத்தின் ஈர்ப்பில்

காற்றிடை புகா அணைப்பில்
மோகத்தின் கவிதையை
இந்த உள்ளங்கள் வடிக்கையில்

நிலவுத்தோழியும் வெட்கத்தில்
மெல்ல சிவந்திருக்கும் மேகத்திடை
தன் வெண்முகம் மறைக்க..

நந்தவனத்தில் அரங்கேறுது


ஒரு புரிதலின் காதல்...

கருத்துகள் இல்லை: