வியாழன், 31 டிசம்பர், 2015

திரும்பிப் பார்க்கிறேன்


முன்னோக்கிய பயணத்தில்
கொஞ்சம் திரும்பிப்பார்ப்பதும்
சுகமானதாய் தான் இருக்கிறது....
எத்தனை மேடுபள்ளங்களை தாண்டி..
எத்தனை வீழ்ச்சிகளையும் ஏற்றங்களையும் கண்டு...

உருண்டோடும் காலத்தோடு
ஓடிக்கடக்கும் நேரத்தில்
திரும்பிப்பார்த்தல் கொஞ்சம்
இளைப்பாறுதல் தான்....

ஏற்றத்தில் கொக்கரிக்காத
மனத்தால் தானே வீழ்ச்சியில்
கொஞ்சம் நிதானிக்க முடிகிறது..

என் வாழ்க்கையில் கடந்த தூரத்தில்
கொஞ்சம் விட்டுக்கொடுத்தலோடும்...
கொஞ்சம் அறியாமையாலும்...
கொஞ்சம் பயத்தோடும்...
நிறைந்த பாசத்தோடும்...
நெஞ்சில் நிம்மதியோடும்...
நான் கடந்துவந்தபோதும்...

இல்லக்கின் உச்சியினை
இன்னும் அடையாமல்
கும்பலில் ஒருவனாக
என்னை தொலைத்துவிட்டிருக்கிறேன்..

முடிந்துபோன ஓட்டத்தில்
எனது வீச்சு குறைவாகவே உள்ளது...
சிறிது சங்கடமே..
ஆனால்....தோல்வியில்லை...

பூஜ்ஜியத்தில் தொடங்கிய ஓட்டம்

ஒன்றிலாவது நிற்கிறதே...


கருத்துகள் இல்லை: