புதன், 16 டிசம்பர், 2015

அயல்நாட்டு வேலை..


கடலைத்தேடி ஒரு நதியின்
பயணமாய்...
பூவைத்தேடி ஒரு வண்டின்
பயணமாய்..
அக்கரைப்பச்சையிலே.
எல்லாம் பெறலாமென்று
இக்கரையின் வாழ்வை
இருப்பில் வைத்துவிட்டு
பறந்து செல்லும் பயணம்..
அக்கறை குடும்பத்தில் கொண்டு
சக்கரை பாசத்தை மனதிலே
ஏந்திக்கொண்டு..
கிடைக்காத இன்பத்திற்கு ஏங்காமல்
வரப்போகும் சொர்க்கத்தின் வாழ்விற்கு
இந்த பயணம் அச்சாரம்..
பாலையின் வெப்பம் உடல் தகிக்க
பாசத்தின் அழைகுரலோ
உள்ளத்தில் பனியாய் உருகிக்
குளிரும்..
நடுங்கவைக்கும் மேல்நாட்டுக் குளிரில்
உறவுகளின் கண்ணீரே..
உறைந்துப்போகாமல்
உயிர்ப்போடு வைத்திருக்கும்...
பொருளில்லாது உலகத்தில் கிடைக்காது
வெற்றி..
பொருள்தேடி உலகெலாம் அலைந்தே
தேடுமே வெற்றியின் வெறி..
காசுக்காக கடலேறி வந்தோம்..
நேசத்திற்காக நெஞ்சு வெடித்து நிற்கிறோம்..
போகட்டும்...
கடனாளியாக கடல்தாண்டி வந்தோம்..
சிறு கூட்டுக்குள் அடைந்து
பணத்தையும் இயற்றினோம்..
வெறுமையானா நாட்கள் தான்
வெளிநாடு வாழ்க்கை...
தாய்மண்ணை தொடுகையிலே வ்ரும்
உற்சாகத்தின் முன்னே...

கருத்துகள் இல்லை: