வெள்ளி, 25 டிசம்பர், 2015

புரிதலின் வாழ்க்கை


வெள்ளைக்காகிதத்தில் ஒரு கறுப்புப் புள்ளியாய் தனது செய்கை ஆனது குறித்து மிகுந்த கலக்கத்தில் இருந்தால் வனஜா...
ஒரு சிறிய புரிதல் இல்லாத தருணத்தில் ஏற்பட்ட பிறழ்ச்சியில் நடந்த தவறுக்காக யாரை குறை சொல்லி வருந்துவது. போனது போகட்டும் என்று மன்னிக்கும் மனம் தானே எல்லா காயங்களுக்கும் மருந்திடுவது.
“எல்லாம் சரியாகிடும் அம்மு..நீ ஒன்னும் வருத்தப்படாத” என்றாம் அன்பு.
அன்பு தான் என்றும் அன்பானவனே.. வனஜா கொஞ்சம் அவசரம், ஆத்திரம், ஆதங்கம் கொண்டாலும் அடிப்படையில் அன்பே உருவானவள். இப்படி இருந்தாலும் இவர்கள் குடும்ப வாழ்வில் எந்த குறையும் இல்லை.
“ம்ம்ம்.. இருந்தாலும் அப்படி ஆகி இருக்கக்கூடாது பா... என்னவோ தெரியல.. கொஞ்சம் அவரசப்பட்டுடேன்.” “இப்ப ரொம்ப வருத்தமா இருக்கு” என்ற வனஜாவின் சொல்லுக்கு
“சரி விடு அம்மு” இது எல்லாம் எல்லோருக்கும் எதோ ஒரு கட்டத்தில் நடப்பது தானே” என்றன் வாழ்க்கையின் பாதையில் அசைந்தாடி செல்லும் பூங்காற்றாய்.
“ம்ம். என்ன இருந்தாலும் நா அவன பார்த்தாலும் சும்மா வந்திருக்கணும். அவன பார்த்து பேசி.. இப்ப உங்களுக்கும் சங்கடம்”ம்ம்ம்.. விதின்னு ஒன்னு இருக்கேன்னு அப்பப்ப இப்படி எதாவது ஒன்னு நடந்து காட்டிட்டு போகுது..” வனஜாவின் வார்த்தையில் இருந்த உண்மை அன்புக்கும் புரிந்தது...
“சரி விடும்மா..”
“நீ எதோ கூட கல்லூரியில படிச்ச பையன். ரொம்ப நல்ல நண்பன்னு சொன்ன. ஆனா அவன் மனச நாம தெரிஞ்சா இருக்க முடியும்” அன்புவின் வார்த்தை கொஞ்சம் தேற்றினாலும்..
வனஜா அவள் கல்லூரித் தோழன் விசுவை இன்று கணவனோடு கடைவீதி செல்லுமிடத்தில் எதேச்சையாக சந்திக்க..விசு சொன்ன செய்தி தான் இங்கே இவர்களுக்குள் பேசப்படும் பொருளாகிப் போனது.
விசுவும் அனிதாவும் வனஜாவுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அத்தருணத்தில் அனிதாவின் காதலை ஏற்கலாமா வேண்டாமா என்று விசு வனஜாவிடம் கேட்க.. அவளோ அனிதாவின் பணத்திமிரையும் , யாரையும் மதிக்காத உண்மை குணத்தையும் மறைத்து நடுத்தர குடும்பத்தின் விசுவிடம் உனக்கு ஏற்றவள் என்று சொல்லி அவர்களை காதலர்களாக மாற்றியதும் கல்லூரி காலத்திற்கு பின் தொடர்பற்ற நிலையில் விசு, அனிதா காதல் கைக்கூடி ஒரு குழப்பமான நாளில் அனிதா தன் வாழ்வை குழந்தையோடு முடித்துக்கொண்டதும், இன்று விசு சிறையில் இருந்து மீண்டு ஒரு கேவலமான வாழ்க்கையை வாழ்வதும் குறிந்து நொந்து சொன்னது தான் இப்போது வனஜாவின் மனதை வருத்தும் காரணியாய்..
“விடு அம்மு.. ஒரு புரிதல் என்பது பணத்தின் அடிப்படையிலோ, கொண்டாட்டங்களின் கலப்புகளிலோ இல்லை. உண்மையான அன்பில் தான் உண்மையான காதலில் தான் இருக்கிறது”

கருத்துகள் இல்லை: