கோலத்தில் அலங்கரித்த
தெருவெங்கும் பூத்திருக்கும்
மார்கழிப்பூக்கள்..
தைபெண்ணின் தோழி இவள்.
மார்கழியா மங்கலப்பெண்..
சீர்தருவாள்.. சிந்தை இனிக்கும்
நல்லிசையும் நமக்குத் தருவாள்..
இவள் வசந்தகால வழிகாட்டி..
கார்த்திகைப்பெண் கை பற்றிய
ரௌத்திரம் கொண்ட மழைமணாளனை
வென்ற வெற்றி மங்கை..
குளிர்ப்போர்வை கொண்ட
பெண்தான்..
கோபங்கொள்ள மாட்டாள்..
காமனவன் கணைக்கொண்டு
மோகத்தின் தாபத்தை தீத்திடுவாள்..
தபசிகளை கொஞ்சமே சோதித்திடுவாள்..
பீடுடைப்பெண்ணே உன்னை
பீடை என்றுரைத்தை வாயில் மண்ணே..
உழவர்களின் வெள்ளாமை
ஊருக்கே பசி தீர்க்க..
பக்தியினால் பரவசங்கள்
பாரினிலே பரவிடுதே..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக