யுகங்கள் கடந்து சுற்றும் பூமி பந்தாய்..
காலங்கள் கடந்தாலும் வாழும்
காதல் தான் வாழ்க்கை..
நேசத்தின் பிணைப்பும்
பாசத்தின் பிணைப்பும்
ஒன்றிணைந்த தாம்பத்திய
புரிதலே இனிய வாழ்க்கை....
ஊடல்களும் கூடல்களும்
வேதனைகளும் சோதனைகளும்
இன்பத்தை கூட்டியும்
உறவுகளை வலுவாக்கியும்
செல்லும் நிகழ்வு ஊக்கிகள்..
புரியவைத்தும் புரிந்துகொண்டும்
விட்டுத்தந்தும் பெற்றுக்கொண்டும்
வாழும் விழுமியமே வாழ்க்கை..
முளைக்கும் வேறுபாடு களையாமல்
எரிக்கும் வேதனைகள் பகிறாமல்
மனதைப்பூட்டி பிரிதல் தேட
வாழ்க்கை வியாபார ஒப்பந்தமல்ல..
வாழ்க்கை பெண்ணோடும் ஆணோடும்
முடிவதல்ல ..
குடும்பத்தால் தழைத்து நம்மை
என்றும் வாழவைப்பது..
மனைவிக்கு கணவன் உருகுவதும்
கணவனுக்கு மனைவி துணையாவதும்
இனிய வாழ்க்கை..
காதலாகி கசிந்துருகி செல்லும்
வாழ்க்கைப் பாதையில் துணையிழப்பு...
அந்தரத்தில் பறக்கும் பட்டத்தின்
நூலறுந்த நிலையாகும்..
பட்டம் பரிதவித்து இறங்குமிடம் தெரியாது..
நூலோ அமைதியாக தன் கூடடையும்..
பெண்மையெனும் பெருமருந்து நூலாக..
பெண்ணுக்கு கட்டுப்பட்ட பட்டமே ஆணாவான்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக