புதன், 23 டிசம்பர், 2015

புதுக்குறள்

முகம்பார்க்க தவறுவா ருண்டு தவறார்
நாளுமிந் தமுகநூல் புக...

முகமறியார் முழுஆகம மறியார் என்றும்
ஓங்கிவளர் முகநூநட் பென்பார்

கேட்டுங்கோடுக்காத உள்ளத்தை மாற்றி கேளாமல்
அள்ளித்தர வைத்தபெரு மழை 

ஆக்கமும் ஊக்கமும் கேடில்லை நோக்குங்கால்
உழையாதார் நாட்களே கேடு.

மோகனப் புன்னகையு மயக்கும் விழிகளுமே
ரதிபதி சன்னதி  வாசல்..

மழையோடும் ஆறுமண் மேடுஆக நீரோடு
போகுமே நீகட்டிய வீடு.

பொருளில்லா வாழ்வேது புகழ்விரும்ப மனமேது
இம்மண்ணில் வாழும் உயிர்க்கு.

அடுக்களையில் உதவிப்பின் னணைக்கையிலே இதழோற்றி
உயிர்கலப்பான் உள்ளத்தின் நாயகன்.

உடுக்கைக்களையா உள்ளத்தன் பால்லெற்றந் தறுமே
உண்மை காதல் பூவினிலே.

கேடென்று வீழ்கையிலே கேளாது கரம்தருமே
மேலான உயிர் நட்பு..


கருத்துகள் இல்லை: