செவ்வாய், 29 டிசம்பர், 2015

துள்ளாத மனமும் துள்ளும்...


சோர்ந்திருக்கும் வேளையிலே
சொர்க்கம் தரும்
மழலைமொழி கொஞ்சம்
காதில்விழ....
துள்ளாத மனமும் துள்ளும்...
நேத்திருந்து பூத்திருந்த
காதல்மலர்
கன்னியவள் கண்களிலே
பூத்துவிட...
துள்ளாத மனமும் துள்ளும்...
பசித்திருக்கும் வேளையிலே
ருசித்திருக்கும்
விருந்தொன்று பந்தியிலே
வந்திருக்க..
துள்ளாத மனமும் துள்ளும்...

கருத்துகள் இல்லை: