பொங்கிப் பாய்ந்தது
பெருவெள்ளம்..
பிரவாகம் எடுத்தது
புதுவெள்ளம்...
அச்சமே அறியாதார்க்கு
அச்சத்தையும்..
பசியே அறியாதர்க்கு
பசியையும்..
அண்டை வீட்டாரையே அறியாதார்க்கு
அநேகரையும்...
யாரும் கேளாமல் தருவதற்கு
பரந்தமனதையும்..
கேட்டுப் பெறுவதற்கு எளிமையையும்..
அடையாளம் காட்டிச்சென்றது...
எங்கிருந்தது இவ்வளவு நாட்கள்..
உயிர்க்கு உயிர்க்காட்டும் பரிவு பிறந்து
மண்ணின் பொன்னின் பற்று..
நிலையாமை என்று புரிந்தது..
வெறும் மனிதர்களாய் ஓடியவர்கள்
மனிதநேய மலர்களாய்
ஓரிரவில் பூத்தனர்..
மழையாய் பெய்த நாளில்
மலர்ந்த மனிதத்தில்
நான் தொலைந்து போனேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக