அன்பு வழியாகி
ஆசைமொழியாகி..
நேச சிறகடித்து
காதல் வானிலே பறக்க
வா செல்லமே..
விழியாலே தொடுத்த
நம் விளையாட்டு யுத்தத்தை
முடித்துக்கொள்வோம்..
வா செல்லமே..
விரல்பிடித்துக்கொஞ்சும்
உன் இடைப்பிடித்து பொன்மஞ்சம்
தஞ்சமடைவோம்..
வா செல்லமே..
இந்த கனவுகள் பொய்யன்று..
இந்த வார்த்தைகள் பொய்யன்று..
இந்த உலகம் பொய்யன்று..
என் உள்ளமும் பொய்யன்று..
வா செல்லமே..
இதழ் எழுதும் கவிதை வரிகளை
இமை மூடாது கொஞ்சம்
வாசிப்போம்..
வா செல்லமே..
வாழ்வு பெரிதன்று..
வாழ்தல் பெரிதன்று..
காதல் பெரியதென்று..
காலம் புரிந்துகொள்ளும்..
வா செல்லமே..
மரம்படர்ந்த கொடியாகி
மண்கலந்த நீராகி..
உயிர்சேர்ந்த காற்றாகி..
ஒன்று கலந்திடவே..
வா செல்லமே..
வானம் கறைந்துவிட..
கடலும் வற்றிவிட..
மலைகள் மடிந்துவிட..
காதல் நிலைத்திருக்கும்..
வா செல்லமே..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக