உயிர்களில் மனிதனின் சிறப்பு..
பூக்களின் மொழி..
வசந்தத்தின் வாசல்படி..
ஏன் மௌனம் நட்பே...
உன் உதட்டின் உவகை..
ஊக்கத்தின் வாயில்.
எதற்கு வருத்தம்..
கவலைகள் இல்லா மனிதனில்லை..
கவலைகள் இல்லா நாட்களுமில்லை
உன்னால் ஒரு நகைச்சுவைக்கு
மீண்டும் மீண்டும் முடிவதில்லை..
பின் ஏன்..
ஒரே துக்கத்திற்கு
மீண்டும் மீண்டும் கண்ணீர்..
உவகை கொள்..
நம்பிக்கையோடு உவகை கொள்..
பூக்கட்டும் உதட்டில் உவகை..
உவகை கொள்..உள்ளம் தெளிவுறும்..
உவகை கொள்..உள்ளம் வேகமடையும்..
உவகை கொள்..உள்ளம் உற்சாகமடையும்..
உவகை கொள்..உனக்கே உனக்குப் பிடிக்கும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக