சனி, 26 டிசம்பர், 2015

மனைவி


இறைவன் கொடுத்த வரம் தான்
இதில் சொல்ல ஏதுமில்லை..

நாற்றாகி வளர்ந்து
செடியாகி ஊட்டம் தந்து
ஓருயிராய் கலந்து
உயிர்கவிதை வரைவது
அவளன்றி யாருளர் இம்மண்ணில்..

கண்ணுக்கு இமையாகி..
கருவுக்கு தாயாகி..
எண்ணத்தில் வளம் சேர்க்கும்
தெய்வத்தின் வரம் தான்..

அமுதூட்டும் தாய் அவள்தான்
அழகூட்டும் சேய் அவள்தான்
நம் மதிப்புகூட்டி ஆண்மகனாய்
வாழ வைப்பதும் அவள்தானே..

சொல்லச்சொல்ல நெகிழ்ந்திடும்..
செய்கையால் வாழ்ந்திடும்
தர்மத்தின் வழிவாழும்
தாய்மையின் மறுவுருவம்..

மகளாக, தோழியாக
சோதரியாய், உருவங்கொண்டு
வாழ்ந்தாலும் அவள் மனது
கொண்டவனின் நலம் தேடும்..

சொல்லொன்னா துயரதிடை
அன்போடு காத்துஎன்றும்
ஒருகூட்டுப்பறவையாக
பார்த்திருக்கும் தேவமகள்..

கருத்துகள் இல்லை: