திங்கள், 13 ஜூன், 2016

தவிப்பு

கடமை அழைக்கையிலே 
கால் கட்டி நிற்கிறது பாசம்..
கடமைக்கு கால் கொடுப்பதா?
பாசத்திற்கு பணிந்திருப்பதா?
கனத்த மனதோடு
கடமை பெரியதென
பாசத்தை தவிக்கவிட்டு
புறப்படுகிறார் இவர்...
புரியாத உள்ளங்கள் 
ஒரு "உச்" என்ற ஒலியோடு
கடக்கிறது மனிதத்தை..

கருத்துகள் இல்லை: