சனி, 11 ஜூன், 2016

உடன்பிறந்தசகோதரிக்கு


தாயாகி சேயாகி அன்பூட்டும் தங்கச்சியம்மா..
உன் புன்னகை மொழியில் தினம் பூக்கிறேன்..
இல்லாத சொந்தத்தை உண்டாக்கி தந்தாய்..
நெஞ்சத்தின் வெற்றிடத்தை நிறைவாக்கி கொண்டாய்..
உன் வார்த்தையின் வருடல்கள் எனக்கு சாமரம் வீசுகிறது
உள்ளத்தில் உயரிடத்தில் வைத்த உனக்கு
யாதும் செய்திடா நிலையில்.சூழல்..
தெரியும்.. என்றும் எதிர்பார்க்க மாட்டாய்..
ஏனோ மனதில் ஒரு ஏக்கம்..
காலங்கள் மாறும்..
நிலைமையில் மாற்றம் வரும்
உன் துயரங்கள் தீர்ந்துவிடும்..
வாழ்த்துக்களை அள்ளி வீசி...
வாழ்த்தும் அன்புள்ளம் என்றும் நலமே..
எல்லாம் மாறிவிடும் நம்பிக்கை தீராது..
எல்லாம் நல்லதாகும் பொற்காலம் வந்துவிடும்..
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்..
தூரங்கள் இன்றைக்கு தூரங்கள் அல்ல..
துயரங்கள் என்றைக்கும் துயரங்கள் அல்ல..
இனிமை பூத்துவிடும்..
உன்னை காணும் நாளில்
கண்களும் பணித்துவிடும்..

கருத்துகள் இல்லை: