சனி, 20 ஆகஸ்ட், 2016

பாசத்துக்கு ஒரு வரி (ரக்க்ஷாபந்தன்)

பாசம் என்பது பணம் காசு கொடுப்பதால் வருவதல்ல..
அன்பை அள்ளிக்கொடுப்பதால் மட்டுமே...
உணர்வுகளின் சங்கமம் சகோதர பாசம்..
நெகிழ்ச்சி தருவதோ
அண்ணன் தங்கையாய்..
அக்கா தம்பியாய் முகிழும் பாசம்...
உடன்பிறந்த சகோதரி இல்லை தான்..
நானும் உணர்ந்தேன் அந்த பாசத்தை
என் அன்னை தந்தை வழி சகோதரிகளிடம்..
என்றைக்கோ வரும் சந்திப்பில்
தித்திப்பு தரும் அந்த பாசம்..
இப்போதெல்லாம் முகநூல் நுழைந்தாலே
என் அன்பு தங்கைகளின் பாச மழையும்..
அருமை தமக்கைகளின் நேச வார்த்தைகளும்..
மனதின் வலிகளுக்கு இதமாய்
வருடிவிடும் வசிய மருந்தாய் இருக்கிறது..
முகம் பார்த்து, குரல் கேட்டு சிலரும்..
முகவரியும், முகவடிவும் தெரியாத
மனதின் நேசத்தில் பலரும்
அன்பை அள்ளி தருகையில்..
எப்பிறப்பில் எங்கு

என்ன தவம் செய்தோனோ....

கருத்துகள் இல்லை: