வியாழன், 18 ஆகஸ்ட், 2016

ஆதலினால் காதல் செய்வீர்




மேகத்தில் மிதக்க ஓர் பாதை தரும்..
மென்மையாய் மனசு மாறும்...
இருப்பதற்கும் இல்லாததற்கும் இடையில்
ஒரு இன்ப சொர்க்கமாய் துடிக்கவிடும்..
கால்கள் பரவா நடையில் பூமியில் மிதக்கும்
உணர்வுகள் கனவுகளில் மிதக்கும்...
காணும் நட்சத்திரங்கள் பலகோடி என்றாலும்
ரசிக்கும் நிலவு ஒன்று போலவே..
கடக்கும் முகங்கள் கோடி என்றாலும்
எல்லா முகமும் காதலின் முகமாய் ஒளிரும்..
துன்பங்கள் கணங்களில் காணாது ஒளியும்..
கோபத்தின் பார்வைகள் தொலைத்து போக..
கருணை மலரை பூக்க வைக்கும்..
சொல்லும் எல்லாம் உணரும் சிலவே..
சொல்ல முடியாதது தானே பலவும் காதலில்..
இனிமை.. இனிமை.. இனிமை..
இது தவிர்த்து என்ன இருக்கிறது காதலில்...
கற்பனை சிறகுகள் ஒருபுறமெனிலும்..
காதல் தருமே மனதில் ஒரு
வீரத்தின் கிரீடம்..
வீட்டிலும் வெளியிலும் முளைத்திடும்
தடைகளை வெட்டியெறியும் வீரமும் விவேகமும்..
சிந்தனையும் வேகமும்..
எல்லாம் தந்து பெறுவது ஒன்று மட்டுமே..
அது உன்னையும்.. உன் உயிரையும்..
ஆதலினால் காதல் செய்வீர் <3 

கருத்துகள் இல்லை: