வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

உயிர் எங்கே

நீலவானும் நிலவும் போல
ஆழ்கடலும் அமைதியும் போல
இருக்கும் உன் பேரெழில் முகம்..
மெல்ல வார்த்தைகள் கோர்த்த
கவிமாலை கொண்டு
உன்னை அர்ச்சிக்க வருகையிலே
எதோ ஒன்று என்னில் குறைவதாய் உணர்ந்தேன்..
காடுமலை பல கடந்தும்
கடல்வானம் தாண்டி தேடியும்
அறியாது தவித்து நிற்கையில்
மெல்ல என் உயிர் மூச்செடுத்து
உனக்காக ஒரு வார்த்தை
நெய்து விட தொடங்கியபோதுதான் தெரிந்தது

என் உயிர் உன்னிடம் இருப்பது..!

கருத்துகள் இல்லை: