சனி, 6 ஆகஸ்ட், 2016

நட்பு

நட்பென்பது யாதெனின்
புரிதலின் நம்பிக்கை என்பேன்..
நம்பிக்கையின் ஆணிவேர் அது..
நம்பிய நட்பாயின் சந்தேகம் இல்லாது போகக்கடவது.
துரோகம் நட்பின் அழுகிய வேர்..
வெட்டி எறியுங்கள்..
குலம் ஏது கோத்திரம் ஏது..
தேடிப்பார்த்து வருவதா நட்பு..
சிறு புன்னகையிலும் பூக்கும்
சில மோதலிலும் பூக்கும்..
நட்பு இறுகிவிட்டால்
அங்கே நயவஞ்சக நரிகளுக்கு
நாட்டமை கிடையாது
நட்பு நம்பும்..
நட்பு ஓடிவரும்..
நட்பு கைகொடுக்கும்..
நட்பு நேசம் தரும்
நட்பு கூடவே பயணிக்கும்
நட்பு உயிரோடு கலந்து விடும்
நட்பு அவசியமெனின்
உயிரையும் கொடுக்கும்
உயிரையும் எடுக்கும்..
உறவு இல்லாத உயிர்கள் இருக்கலாம்...

ஆனால் நட்பு இல்லாத உயிர்கள்?

கருத்துகள் இல்லை: