உயிராய் தான் நினைக்கிறேன்..
ஏனோ புரிதலை தொலைத்து நீயும்
அர்த்தமில்லா மௌனத்திற்கும்
கோப முலாம் பூசி
மெல்ல மெல்ல நெஞ்சை நிமுண்டுகிராய்..
உனக்கு மட்டும் எங்கே கிடைகிறது..
வார்த்தைகளில் சொருகிய
குத்தீட்டிகளும், கொலை வாள்களும்..
உந்தன் மௌன யுத்தம்
மெலிய கீறலை
பெரும் விரிசலாக்கி வேதனை கூட்டுகிறது..
வரம்பில்லா வார்த்தைகள்
வரப்பில்லா நிலத்தின் ஓடையாய்
மனதை அரிக்கிறது..
பளபளக்கும் நட்சத்திரங்களை மறுத்து
மறைந்து விட்ட நிலவுக்காய்
உன் வேதனைகளை மற்றவர் மேல் வீசுகிறாய்..
என் நம்பிக்கைகளை
குயவனின் காலடி மண்ணாய்
கொட்டிவிட்டாய்..
நானோ புது உருவம் கொண்டு வரும்போது
போட்டு உடைக்கிறாய்..
சோதனைகள் மனதை புடம் போடலாம்..
நீ தரும் வேதனைகளோ
அடிவேரையே வெட்டிக் சாய்க்கிறது..
மனதின் பாரங்களை குறைக்கும்
வார்த்தைகளை தேடும்போதுதான்
பாய்ந்து வந்து இதயத்தை துளைக்கிறது
வார்த்தை கணைகள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக