புதன், 10 ஆகஸ்ட், 2016

சிநேகிதனே...



சொல்ல சொல்ல இனிக்கும் சுவைக்கும்
சிநேகிதர்களோடான பழையநினைவுகள்..
ஓடித்திரிந்த பருவமாய் இருந்தாலும்..
பக்குவப்பட்ட வயதின் பருவமாய் இருந்தாலும்
நட்புக்களின் கூட்டில் செய்த எல்லாமே
சுகந்தரும் இனிமைகள்..
வேலை, திருமணம் என்று
திசைகள் மாறினாலும் மனதில்
நீங்காது இருப்பது இந்த இனிமைகளே..
காலங்கள் தீர்க்காத பல வலிகளை
தீர்ப்பதில் முன்னிற்பது நட்பின் நினைவுகளும்
நட்பின் ஆதரவும் தான்..
இன்றைக்கும் நட்புக்கள்
நம்பிக்கையின் வேர்களாய்
சுற்றிலும் விரவிக்கிடக்கிறார்கள்..
சிறுவயது தோழமையோ..
பள்ளிக்கால பாதி நட்போ..
கல்லூரிக்கால கலக்கல் நட்பு..
வேலைக்கால பாச நட்போ..
நட்புகள்
என்றும் எப்பொழுதும் என்றைக்கும்

தூயவையே.

கருத்துகள் இல்லை: