புதன், 31 ஆகஸ்ட், 2016

பெண் மனம்.....



அன்பைத்தூவிட பூவாய் மலர்ந்திடும்..
கோபத்தைவீசிட தீயாய் எரித்திடும்..
ஆசையில் அணைத்திட மோகத்தில் தூய்திடும்..
பெண்ணின் மனமே மாயக்கண்ணாடி..

ஆழியின் ஆழமோ அறிதற்கு எளிது...
தூங்கும் எரிமலையோ துயரத்தின் வாசல்..
துடிக்கும் இதயமோ உயிரின் ஊஞ்சல்..
புரிந்தது கொஞ்சம் புரியாதது பெண் நெஞ்சம்..

அன்பென சொன்னால் பேரன்பு என்பாள்..
நட்பென சொன்னால் உயிரென நிற்பாள்..
காதல் என்றாலே கவிதையாய் உருகுவாள்..
தாய்மை மொழியில் மனதில் நெகிழ்வால்..

துரோகம் கண்டதும் கொதித்திடும் உதிரமாய்..
கர்வம் கொண்டதும் சொல்வதே மெய்யென..
ஆசைக்கொண்டதும் அகிலமே சிறிதென..
நேசம் தந்தும் எனக்கே எனக்கென..

அன்பில் அதிரடி தேனடி..நீ..
இப்பூவினில் விளங்காத புதிரடி நீ
வாயடி சொல்லடி வைப்பதில் பேயடி..நீ.
ஓரடி ஈரடி உன்மடி சொர்க்கமடி..

புரிந்தும் புரியாத இயற்கையின் ரகசியமாய்
கண்முன்னே நிற்பது பெண்ணின் மனமே..
புரிந்தவன் கொள்வது மௌனம்..

புரியாதவன் வாழ்வது போர்க்களம்..

கருத்துகள் இல்லை: