ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

நினைவுகளில் நீ

தூங்காத இரவுகளில் தொல்லை கொடுக்கும்
உன் நினைவுகளின் பிடியில் இருந்து
என்னை விடுவித்து விடு..
நீங்காத பொழுதுகள் போய்
இன்று
நினைவு சிறையில் இருந்து
தினம் தினம் என்னை வதைக்கிறாய்..
விழிகள் திறக்கும் போதெல்லாம்
எங்கும் உன் உருவமே..
உன் வேடிக்கை சீண்டல்கள் எனக்கு
வெக்கத்தை பரிசளிக்கையில்
நீயோ..
அருவமாக இருந்து என் வேதனையை
ரசிக்கிறாய்..
தூரங்களை தொலைத்து மனதோடு நீ
இருந்தாலும் வாட்டிடும் வேதனை

உனது முகத்திலும்....?

கருத்துகள் இல்லை: