என் உயிரை குடிக்க வந்த துளியாய்
வீழ்ந்தாய் மழையே..
அவள் நெற்றியில் முத்தமிட்டு நாசி தழுவி
மெல்ல இதழணைக்க..
என்னை நோக்கிய அவள் வழிகளில் வழிந்த
வெட்கத்தை துடைத்து நீயும்
மேனியில் வழிந்தோடி மோகத்தை ஊற்றி சென்றாய்..
மோகத்தில் துடித்த மெல்லிடையாள் கை
வெட்கங்கொண்டு வழிகளை மூட..
நீயோ வெற்றிகொண்ட போதையில்
வீதிவழி குதித்தோட....
மேனி சிலிர்த்தவளோ வேரோடு என்னை
வீழ்த்தி என் வெட்கத்தையும் வெற்றிகொண்ட
கட்டில் கதை இனி எதற்கு....?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக