வெள்ளி, 2 டிசம்பர், 2022

சிறையில் கடவுள்

 எதோ ஒரு நாளில்
எதோ ஒரு இடத்தில்
அறிமுகமானார்
அறிமுகமில்லாத அந்த மனிதர்..
 
மெல்ல பேசிக்கொண்டதில்
உலகத்து உயிர்கள் தன் படைப்பென்றார்
தான் நினைப்பதே இவ்வுலகில் நடக்குமென்றார்
இவ்வுலகத்தில் இருப்பவனவற்றில் எல்லாம்
உயர்ந்தது நானேயென்றார்...
 
எதோ ஒரு இறுமாப்பு
எதோ ஒரு தற்பெருமை
உன்னால் என்ன முடியும் என்ற இளக்காரம்...
 
பார்த்துக்கொண்டும்
பேசிக்கொண்டும் இருந்தான் அவன்
அந்த மனிதனோ சளைக்கவில்லை...
தன் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போக...
 
பொறுமையிழந்த அவன் கேட்டான்..
நீங்கள் யாரென்று...
நான் தான் கடவுள் என்றார் அந்த மனிதர்..
 
மெல்லச் சிரித்த அவன் சொன்னான்...
உலகத்தை படைத்தது நீரென்றால்
இந்த உலகத்தில் உம்மைப் படைத்தது நான்தானே..
பிறகெப்படி நீர் என்னை விட உயர்ந்தவர் என்றான்..
 
நீண்ட விவாத்தில்
ஒருவருக்கொருவர் சளைக்காத நிலையில்
அவன் சொன்னான்..
கடவுளே..
பொறுத்தருள்க...
உம்மை மதச்சிறையில் அடைக்கிறேன்...
முடிந்தால் மீண்டு விடுதலை பெறுங்கள் என்றான்...
தோல்வியில் அமைதியானார் கடவுள்..
 
#சங்கர்_நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: