வெள்ளி, 2 டிசம்பர், 2022

பிரிதல்

 மரத்தின் கிளையோடு பிணைந்திருந்த
ஒரு இலையைப் போலவே
வாழ்க்கை..
கால மாற்றத்தில்
வசந்தங்கள் போய்
மெல்ல வந்த கோடையைப் போல
வாழ்க்கையின் எல்லையில் இருந்த
மனிதனுக்கு...
ஒரு இலை உதிர்வதைப் போல
இந்த மண்ணில் உதிர்ந்து விடுவது
அவ்வளவு எளிதாக இருப்பதில்லை..

#சங்கர்_நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: