வெள்ளி, 2 டிசம்பர், 2022

மௌனத்தின் கூக்குரல்

 எல்லா திசைகளிலும்
எதிரொலித்துக்கொண்டே
இருக்கிறது
யாரும் கேட்காத
என் மௌனத்தின்
கூக்குரல்...
ஊமையாகிக்கிடக்கிறது
உலகத்தின் காதுகள்...
உறங்கிக்கிடக்கிறது
ஊருக்காக ஓலமிடும் மனம்...
ஒதுங்கிக்கிடக்கிறது
ஒன்று கூட முடியாத
திசைகள்...
உன்னைப்போலவே...
 
#சங்கர்_நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: