மரங்களில் இருந்து
உதிர்ந்து விழுகிறது இலைகள்
வானில் இருந்து
மண்ணில் விழுகிறது மழை
கண்ணில் இருந்து
கொட்டுகிறது கண்ணீர்த் துளி
கரை தாண்டி பாய்கிறது
தாலாட்டும் கடலலை
ஏதோ ஒரு நாளில் தான்
நீயும்
பூக்களாய்த் தூவுகிறாய்
உன் புன்னகையை....
அந்த நாளில்
நான் எனோ இருப்பதில்லை
#சங்கர்_நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக