வெள்ளி, 2 டிசம்பர், 2022

பாடம்

 உணர்வுகளின் மொழியில்
இலை உதிர்ந்த மரத்தினடியில்
நிழலில்லா நேரத்திலும்
உன்னால் உட்கார்ந்து
எதைப்படிக்க முடிகிறது...?
காலம் செதுக்கி துப்பிய
வாழ்க்கையின் மிச்சத்தில்
எதைக் கொண்டு
இனி வாழ்வது...?
எந்தப்புத்தகம்
பாடம் சொல்லிக்கொடுக்கும்...?
 

#சங்கர்_நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: