வெள்ளி, 2 டிசம்பர், 2022

புதைந்த உலகம்

 சொற்கள் சேராத இடங்களில்
மோதிக்கொண்டிருக்கிறது
எண்ணத்தின் சிதறல்கள்...
வாஞ்சையுடன்
முகம்பார்த்து
சொல்லொன்று
இடிந்த இதயத்தின்
வலி நீக்க
இதமாக வருமோ...?
ஏங்கி எதிர்பார்த்த வேளையில்
எல்லாம் பொய்யென்று ஆனது...!
இவ்வுலகம் காலடியில்
புதைந்தே போனது...!
 

#சங்கர்_நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: