வெள்ளி, 2 டிசம்பர், 2022

அழகின் கவிதை

 இறகு விரித்த வண்ணத்துப்பூச்சி
நீயென வியந்து நின்றேன்
மலர்ந்த நறுமலர்
நீயென மயங்கி நின்றேன்
ஆடும் மயில்
நீயென அசந்து நின்றேன்
இசைக்கும் குயில்
நீயென கிறங்கி நின்றேன்
இதயம் தொட்ட உன்னழகை 
கவிதையாக்கி
காலடி நின்றேன்
சொல்லாத உன் மவுனம்
மெல்லத்தான்
கொல்லாமல் கொல்லுதே
இவ்வுலகை...
 

#சங்கர்_நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: